நான்
அரங்கேற்றிய கவிதைகளை விட
எழுதிய கவிதைகள் அதிகம்...
நான்
எழுதிய கவிதைகளை விட
சிந்தித்த கவிதைகள் அதிகம்...
நான்
சிந்தித்த கவிதைகளை விட
வாசித்த கவிதைகள் அதிகம்...
நான்
வாசித்த கவிதைகளை விட
நீ பேசும் கவிதைகளே அதிகமடி...
Friday, November 13, 2009
சத்தம்
எப்படி நீ பேசும்போது மட்டும்
வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை என்கிறாய்...
எப்படி கேட்கும்?
உனக்குள் இருந்து நான் பேச
எனக்குள் இருந்து நீ கேட்கிறாயே
என்றதும் சிரித்துவிட்டு
சில சமயம் சத்தம் வருதே
எனக்கேட்கிறாய்...
அடிப்பாவி
என் இதயம் துடிப்பது
உனக்கு பொறுக்கவில்லையா?
Thursday, November 12, 2009
பயணங்கள்...
இலக்குகளை நோக்கிய
பயணங்கள்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
காதில் கேட்கிற கடும் இரைச்சல்...
எதிரில் வருகிற வாகனங்கள்...
எளிதில் கடந்திடும் மரநிழல்கள்...
கலவர நிறுத்தங்கள்...
அழுகின்ற குழந்தைகள்...
விழி வழி நுழைந்து
இதயம் சுடுகிற நிகழ்வுகள்...
செவி வழி நுழைந்து
எண்ணம் சிதைக்கிற வார்த்தைகள்...
எல்லாம் இருந்தும்
பயணங்கள் இனிக்கிறது எனக்கு....
என் வாழ்வின் இனிய தருணங்களை
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....
Saturday, August 22, 2009
அமைதி
மழைச்சாரல்...
பறவையின் சண்டை...
குழந்தையின் சிரிப்பு...
சங்கீதம்...
யாவும் வெறும் ஒலிகளாய்...
உண்மையில்
வெறும் சப்தங்களாய்...
அமைதியற்ற வாழ்வின்
ஆபத்துகள்...
கருவறையிலும்
கல்லறையிலும்
மட்டுமே இன்னும் மீதம்...
எத்தனையோ முறை
அமைதியாய் எழுத முயன்றும்
அமைதிக்காகவே எழுத முடிகிறது...
என்னை நானே நொந்து கொள்கிறேன்
வேறென்ன நான் செய்ய...
Monday, June 1, 2009
நட்புச்சமாதி
இரு விழிகளில்
ஈரம்...
நட்பா?
பிரிவா?
எதனால்?
எங்கேயும்
பிரச்சனைகளுக்கு முடிவில்லை...
முடிவுதான் பிரச்சனை...
நீ...
பிரச்சனைகளால்
முடிவை நாடினாய்...
எத்தனை நினைவுகள் நம்மிடையே...
நட்புச்சமாதியுடன் நீயும்
நினைவுச்சமாதானங்களுடன் நானும்
எதிர் எதிர் திசைகளில்...
உயிர் பிரிவதை உணர்த்தி...
என்றாவது இணைவோம் என்று நானும்
என்றோதானே என்று நீயும்...
Wednesday, May 20, 2009
வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???
Tuesday, May 19, 2009
மாற்றம்
பறவையாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுதந்திரத்தை
பாராட்டுவதற்காக....
தேனீயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுறுசுறுப்பை
பாராட்டுவதற்காக....
எறும்பாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் ஒற்றுமையை
பாராட்டுவதற்காக....
நாயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் நன்றியை
பாராட்டுவதற்காக....
முடிந்தால் மனிதனாக மாறுவோம்
மற்றவர்களை பாராட்டுவதற்காக....
மற்றவர்கள் அதன் சுதந்திரத்தை
பாராட்டுவதற்காக....
தேனீயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுறுசுறுப்பை
பாராட்டுவதற்காக....
எறும்பாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் ஒற்றுமையை
பாராட்டுவதற்காக....
நாயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் நன்றியை
பாராட்டுவதற்காக....
முடிந்தால் மனிதனாக மாறுவோம்
மற்றவர்களை பாராட்டுவதற்காக....
ஜன்னல் வழி
Subscribe to:
Posts (Atom)