இலக்குகளை நோக்கிய
பயணங்கள்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
காதில் கேட்கிற கடும் இரைச்சல்...
எதிரில் வருகிற வாகனங்கள்...
எளிதில் கடந்திடும் மரநிழல்கள்...
கலவர நிறுத்தங்கள்...
அழுகின்ற குழந்தைகள்...
விழி வழி நுழைந்து
இதயம் சுடுகிற நிகழ்வுகள்...
செவி வழி நுழைந்து
எண்ணம் சிதைக்கிற வார்த்தைகள்...
எல்லாம் இருந்தும்
பயணங்கள் இனிக்கிறது எனக்கு....
என் வாழ்வின் இனிய தருணங்களை
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....
No comments:
Post a Comment