Friday, November 13, 2009

கவிதைகள்


நான்
அரங்கேற்றிய கவிதைகளை விட
எழுதிய கவிதைகள் அதிகம்...
நான்
எழுதிய கவிதைகளை விட
சிந்தித்த கவிதைகள் அதிகம்...
நான்
சிந்தித்த கவிதைகளை விட
வாசித்த கவிதைகள் அதிகம்...
நான்
வாசித்த கவிதைகளை விட
நீ பேசும் கவிதைகளே அதிகமடி...

கனவு



உன் கனவில் தினம்
நான் வருகிறேனா
என்றால்
நான் இல்லை என்கிறேன்...
கோபித்து கொள்கிறாய்...
ஏனடி
உன்னை நினைக்கையில்
தூக்கமே வருவதில்லை
பின் எங்கிருந்து 
நான் உன்னை கனவில் காண்பது?

சத்தம்



எப்படி நீ பேசும்போது மட்டும்
வேறு எந்த சத்தமும் கேட்பதில்லை என்கிறாய்...
எப்படி கேட்கும்?
உனக்குள் இருந்து நான் பேச
எனக்குள் இருந்து நீ கேட்கிறாயே
என்றதும் சிரித்துவிட்டு
சில சமயம் சத்தம் வருதே
எனக்கேட்கிறாய்...
அடிப்பாவி
என் இதயம் துடிப்பது
உனக்கு பொறுக்கவில்லையா?

Thursday, November 12, 2009

பயணங்கள்...

இலக்குகளை நோக்கிய
பயணங்கள்...
கண்ணில் தெரிகிற கானல் நீர்...
காதில் கேட்கிற கடும் இரைச்சல்...
எதிரில் வருகிற வாகனங்கள்...
எளிதில் கடந்திடும் மரநிழல்கள்...
கலவர நிறுத்தங்கள்...
அழுகின்ற குழந்தைகள்...
விழி வழி நுழைந்து
இதயம் சுடுகிற நிகழ்வுகள்...
செவி வழி நுழைந்து
எண்ணம் சிதைக்கிற வார்த்தைகள்...
எல்லாம் இருந்தும்
பயணங்கள் இனிக்கிறது எனக்கு....
என் வாழ்வின் இனிய தருணங்களை
எண்ணிப்பார்த்திட முடிவது இங்கேதான் என்பதால்....