Wednesday, May 20, 2009

வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???


எண்ணங்களும்
எழுத்துகளும்
மோதும் மோதலே
கவிதை...
தொடக்கங்களும்
தோல்விகளும்
கொள்ளும் நட்பே
வாழ்க்கை...
வெற்றி உன்னிடம்
வெறும் ஆட்களை சேர்க்கும்...
தோல்வி உன்னிடம்
நல்ல நண்பர்களை சேர்க்கும்...
வெற்றி
உலகுக்கு உன்னை காட்டும்...
தோல்வி
உன்னையே உனக்கு காட்டும்...
வெற்றி நிலையென நிலைத்து விட்டால்???

Tuesday, May 19, 2009

மாற்றம்


பறவையாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுதந்திரத்தை
பாராட்டுவதற்காக....
தேனீயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் சுறுசுறுப்பை
பாராட்டுவதற்காக....
எறும்பாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் ஒற்றுமையை
பாராட்டுவதற்காக....
நாயாக மாற வேண்டாம்
மற்றவர்கள் அதன் நன்றியை
பாராட்டுவதற்காக....
முடிந்தால் மனிதனாக மாறுவோம்
மற்றவர்களை பாராட்டுவதற்காக....

ஜன்னல் வழி


மழைச்சாரல் மண்ணை அடைய
குளிர் தென்றல் என்னை தழுவ
இறையை நம்பா எறும்புகள்
இரையை தூக்கி செல்ல
ஜன்னல் வழி ரசித்திருந்தேன்
additional sheet
யாருக்கு வேண்டும் எனும் வரையில்