Monday, June 1, 2009

நட்புச்சமாதி


இரு விழிகளில்
ஈரம்...
நட்பா?
பிரிவா?
எதனால்?
எங்கேயும்
பிரச்சனைகளுக்கு முடிவில்லை...
முடிவுதான் பிரச்சனை...
நீ...
பிரச்சனைகளால்
முடிவை நாடினாய்...
எத்தனை நினைவுகள் நம்மிடையே...
நட்புச்சமாதியுடன் நீயும்
நினைவுச்சமாதானங்களுடன் நானும்
எதிர் எதிர் திசைகளில்...
உயிர் பிரிவதை உணர்த்தி...
என்றாவது இணைவோம் என்று நானும்
என்றோதானே என்று நீயும்...