உனக்காய் ஒரு முறை
எனக்காய் ஒரு முறை
என சாதம் ஊட்டினாய்
குழந்தையில்...
ஒரு கல் தடுக்கினாலும்
பார்த்து என
பதறினாய்
பள்ளியில்...
ஒரு விழி மூடியும்
மறு விழியில்
ரசித்தாய்
பருவத்தில்...
ஒரு கன்னத்தில் முத்தமிட
மறு கன்னம் காட்டினாய்
காதலில்...
ஒரு விழி அழுதிட
மறு விழி மறைத்திட
மணந்தாய்
மற்றொருவனை...
ஒரு கையில் குழந்தையும்
ஒரு கையில் பெட்டியும்
என கடந்தாய்
என் கல்லறையை...
No comments:
Post a Comment